சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான இடங்களில் சென்னை மாநகராட்சி பூங்கா, விளையாட்டு திடல், உடற்பயிற்சி கூடம் என பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. அதில் அனுமதி நேரமும் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த நிலையில், 137ஆவது வட்டம், கே.கே.நகர் 10ஆவது செக்டாரில் உள்ள சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான காலி மைதானத்தில் எந்த பெயர் பலகையும் வைக்கப்படவில்லை. பூட்டப்படும் நேரம் இல்லாமல் எந்நேரமும் மைதானம் திறந்தே உள்ளது. அதிகாரிகள் இந்த மைதானத்தைப் பார்வையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
எம்.முனுசாமி, கே.கே.நகர்.