மின்விளக்குகள் சரி செய்யப்படுமா?

சென்னை ரசாக் கார்டன் சாலை முழுவதும் மின் விளக்குகள் எரியாததால் பலமுறை புகார் செய்துள்ளோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

சென்னை ரசாக் கார்டன் சாலை முழுவதும் மின் விளக்குகள் எரியாததால் பலமுறை புகார் செய்துள்ளோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் அதிகாலையில் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய், கனி, பூ வகைகள் வாங்கி வரச் செல்லும் பெண்களுக்கு, நகை பறிப்பு, கேலி செய்யும் செயல்களுக்கு ஆளாகின்றனர். மின்விளக்குகள் அதிகாலை 4 மணிக்கு அணைக்கப்படுவதால் சாலையில் உள்ள மேடு, பள்ளங்கள் தெரியாமல் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறிக் கீழே விழுகின்றனர். சென்னை மாநகராட்சி ஆணையர் அதிகாலையில் இப்பகுதியில் சோதனை நடத்தி பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும்.

நித்திலா செல்வராஜ், வில்லிவாக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com