குரோம்பேட்டை கிழக்குப் பகுதியின் மிக முக்கியப் போக்குவரத்து சாலையான ராஜேந்திர பிரசாத் சாலை, நேரு நகரிலிருந்து அஸ்தினாபுரம் பஸ் நிலையம் வரை நீண்டுள்ளது.
இந்த சாலையின் இரு பக்கமும் கடைகள், வணிக வளாகங்கள், ஹோட்டல்கள் உள்ளதால் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளது. சாலையின் நடைபாதைகளை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் நடந்து செல்வோர் சிரமப்படுகின்றன. எனவே அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வி.சந்தானம், குரோம்பேட்டை.