எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த ஆவடி நேரு பஜார் சாலை, மெட்ரோ குடிநீர் குழாய் அமைக்க தோண்டப்பட்டு குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். எனவே, இந்தச் சாலையை சீரமைக்க உடனடி நடவடிக்கை தேவை.
-எஸ்.வைத்தியநாதன், ஆவடி.