திருமுல்லைவாயில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்புக்கு அருகே விளையாட்டு திடலுக்கு ஒதுக்கப்பட்ட இடம் புதர் மண்டிக் கிடக்கிறது. இதனால் இங்கு சமூக விரோதச் செயல்கள் அதிகரித்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. இதைச் சீர் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.