குப்பைத் தொட்டி வேண்டும்!

எங்கள் வீட்டுப் பின்புறச் சுவரையொட்டி அபிராமபுரம் முதல் தெரு உள்ளது. இத்தெருவில் வாழ்வோர் தங்கள் குப்பைகள் மற்றும் இடிபாடுகள், கழிவுப்பொருள்களை எங்கள்

எங்கள் வீட்டுப் பின்புறச் சுவரையொட்டி அபிராமபுரம் முதல் தெரு உள்ளது. இத்தெருவில் வாழ்வோர் தங்கள் குப்பைகள் மற்றும் இடிபாடுகள், கழிவுப்பொருள்களை எங்கள் வீட்டுப் பின்புறச் சுவரை ஒட்டிக் கொட்டுகிறார்கள். துப்புரவுப் பணியாளர்கள் சேகரிக்கும் குப்பைகளையும் அங்கேயே கொட்டுகின்றனர். இதனால் ஏற்படும் துர்நாற்றம் வீட்டுக்குள் பரவி உடல்நலம் கெடுகிறது. இக்குப்பை கொசு வளர்க்கும் பண்ணையாகவும் சிறுநீர் கழிக்கும் பொது இடமாகவும் அமைகிறது. இது தொடர்பாக உரிய அலுவலர்களுக்கு வேண்டுகோள் விடுத்தும் பலனில்லை. தெரு முனைகளில் குப்பைத் தொட்டி வைத்தால் மக்கள் அவற்றில் குப்பை போடுவார்கள். மாநகராட்சியினர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

- முனைவர் மலையமான், ஆழ்வார்ப்பேட்டை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com