வளசரவாக்கம் - போரூர் இடையே லட்சுமி நகர் பிரதான ஆர்க்காடு சாலையின் இருபக்கமும் ஏராளமான கடைகள் உள்ளன. இங்கு பல ஆண்டுகளுக்கு முன் போக்குவரத்தை சீர் செய்ய சிக்னலை நிறுவினார்கள். அந்த சிக்னல்கள் அமைக்கப்பட்டதில் இருந்து இன்று வரை செயல்படாமலே உள்ளது. இதனால் தினமும் ஆலப்பாக்கம் வழியாக மதுரவாயல் போகும் சாலையிலும், பிரதான ஆர்க்காடு சாலையிலும் போக்குவரத்து நெரிசலால் விபத்துகள் ஏற்படுகின்றன. அதனால் செயல்படாமல் உள்ள சிக்னல் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எஸ்.வி. ராஜசேகர், சென்னை-116.