ஆதம்பாக்கம் பிருந்தாவன் நகர் பிரதான சாலையில் கக்கன் பாலம் முதல் கடைசி வரை நடைபாதை கடைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. சாலையின் இருமருங்கிலும் அதிகரித்துவரும் நடைபாதை கடைகளால் அன்றாடம் போக்குவரத்து நெரிசலும், அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன. பொதுமக்களும், பள்ளி மாணவர்களும் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே, சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும்.
-ஆர்.சுப்ரமணியன், ஆதம்பாக்கம்.