குரோம்பேட்டை எம்ஐடி மேம்பாலத்தை சீராக பராமரிக்காததால், அதன் கீழ்பகுதி குப்பைக் கொட்டும் தளமாகவும், கால்நடை கொட்டகையாகவும் மாறிவிட்டது. வர்தா புயலில் சாய்ந்த இரும்பு வேலியும் இன்னும் அகற்றப்படவில்லை. மேற்பகுதியில் பெயின்ட், சுண்ணாம்பு எல்லாம் உதிர்ந்து போய் பாலம் பொலிவிழந்து காட்சியளிக்கிறது. மேம்பாலத்தை புதுப்பித்து, முறையாக பராமரிக்க நெடுஞ்சாலைத் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வி.சந்தானம், குரோம்பேட்டை.