சென்னை நூறடி சாலை திருமங்கலம் மேம்பாலம் கீழ் பகுதியில் ஆவடி, அம்பத்தூர், செங்குன்றம், மீஞ்சூர், பெரம்பூர் போன்ற பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் புரசைவாக்கம் செல்ல இடதுபக்கமாக மேம்பாலத்தின் கீழ்பகுதியிலும், முகப்பேர், அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதிகளுக்குச் செல்ல வலதுபக்கமாக திரும்பவும் வேண்டும். ஆனால் அரசின் நெடுஞ்சாலைத்துறை சார்பாக வைக்கப்பட்டுள்ள வழிகாட்டிப் பலகையில் முகப்பேர், புரசைவாக்கம், அம்பத்தூர் எஸ்டேட் ஆகிய 3 பகுதிகளுக்கு செல்லவும் இடதுபக்கமாகவே அம்புக்குறி இடப்பட்டுள்ளதால். இதனால் இப்பகுதிக்கு புதிதாக வரும் வாகன ஓட்டிகள் இடதுபுறாகத் திரும்பி வெகுதூரம் அலைந்து அவதிப்படுகின்றனர். எனவே நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் இந்தத் தவறை சரி செய்து வழிகாட்டிப் பலகையை மாற்றவேண்டும்.
-கோதை ஜெயராமன், மீஞ்சூர்.