பல்லாவரம் பகுதியைச் சுற்றி பல ஏரிகள் உள்ளன. பல்லாவரம் பெரிய ஏரி, கீழ்கட்டளை ஏரி, நன்மங்கலம் ஏரி, நாராயணபுரம் ஏரி, சிட்லபாக்கம் ஏரி, எசம்பாக்கம் ஏரி, திருநீர்மலை ஏரி, வீரராகவன் ஏரி, நெமிலிச்சேரி - அஸ்தினாபுரம் ஏரி என பல ஏரிகள் உள்ளன. இவற்றில் அஸ்தினாபுரம் ஏரி ஆக்கிரமிப்புகளால் மறைந்தேவிட்டது. இதர ஏர்கள் ஆக்ரமிப்புகளுக்குப் பிறகு சிறிதளவு உள்ளது. இவைகள் பாதுகாக்கப்படவேண்டும். எனவே அரசின் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இந்த ஏரிகளின்பரப்பளவு, நீரின் கொள்ளளவு, சர்வே எண் போன்ற தகவல்களை கல்லில் பதித்து ஏரியின் நான்கு பக்கங்களிலும் நட்டு வைக்க வேண்டும்.
வி. சந்தானம், குரோம்பேட்டை