சென்னை சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் முக்கிய ரயில் நிலையமாக மீஞ்சூர் உள்ளது. இங்கு இரவு நேரத்தில் பிளாட்பாரத்தில் மின் விளக்குகள் எரிவதில்லை. இதனால் இங்கு வரும் பெண் பயணிகள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். சமூக விரோதிகளின் கேலிகளுக்கும், கிண்டலுக்கும் ஆளாகின்றனர். சில நேரங்களில் பெண் பயணிகளிடமிருந்து சங்கிலி பறித்தல் போன்ற சம்பவங்களும் நடைபெறுகின்றன. எனவே இதைத் தடுக்க ரயில்வே காவலர்களை இங்கு ரோந்து வரச் செய்யவேண்டும்.
கோதை ஜெயராமன், மீஞ்சூர்.