மாதவரம் மண்டலம் பகுதி 3-இல் உள்ள சின்ன சேக்காடு பல்ஜிபாளையத்திலுள்ள 14 தெருக்களில் குடிநீர் கட்டமைப்பு வசதிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது மூன்று 3,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டிகள் அமைத்து தினமும் குடிநீர் வழங்கப்படுகிறது. இதைத் தவிர 6000 லிட்டர் மற்றும் 9000 லிட்டரம் கொள்ளளவு கொண்ட லாரிகள் மூலம் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வழங்கப்படுகிறது. மேலும் பிற தேவைகளுக்காக 3 இந்திய மார்க் 2 பம்ப்புகள் பயன்பாட்டில் உள்ளன. எதிர்கொள்ளும் குடிநீர் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு மேலும் ஒரு குடிநீர்த் தொட்டி அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
ஆர். நீலகண்டன், மக்கள் தொடர்பு அலுவலர்,
சென்னை குடிநீர் வடிகால் வாரியம்.