கிண்டி ரயில் நிலையத்தில் இருந்து ரேஸ்கோர்ஸ் செல்லும் வழியில் பல கடைகள் ஆக்கிரமித்து வைத்துள்ளதால் பயணிகள் வெகுவாகப் பாதிக்கப்படுகின்றனர். ரயில் நிலையத்தில் மற்றொரு புறமும் சுரங்கப்பாதையில் பலரும் கடைகள் வைத்துள்ளதால் அந்த வழியாக செல்வோர் அவதிப்பட நேரிடுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுதொடர்பாக உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
ஆர்.கண்ணன், சென்னை - 82.