பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் 4, வட்டம் 46-இல் அமைந்துள்ள சத்தியமூர்த்தி நகர் முல்லை நகர் பிரதான சாலையில் புதிய வியாசர்பாடி மேம்பால தொடக்கத்தில் முன் அசோகர் நினைவுத் தூண் இருந்தது. மேம்பாலம் திறக்கப்பட்டபோது அந்தத் தூண் அகற்றப்பட்டது.
அந்த இடத்தில் இருந்த இரும்புக் கம்பிகள் சாலையிலேயே துருத்திக் கொண்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே அவற்றை அகற்றி அவ்விடத்தில் சாலையைச் சமன்படுத்த வேண்டும்.
இ.ராகுல், வியாசர்பாடி.