சென்னை திருவல்லிக்கேணி சிங்கராச்சாரி தெருவில் போக்குவரத்துக்கு இடையூறாக திரியும் மாடுகளால் அப்பகுதி மக்கள் விபத்தில் சிக்கி வருகின்றனர். கடந்த வாரம் தெற்கு மாட வீதியை சேர்ந்த மாலதி சீனிவாசன் என்ற பெண் மாடு முட்டியதில் இறந்தார். இதுபோன்ற நிகழ்வுகள் அடிக்கடி நடந்தாலும் மாநகராட்சி நடவடிக்கை எடுப்பதில்லை என்று வருந்துகின்றனர் இப்பகுதி மக்கள்.