அண்ணாநகர் 100 -ஆவது வட்டம், ஏ1 பிளாக், 5-ஆவது தெருவில் பல மாதங்களாக தெரு விளக்குகள் எரியவில்லை. இதனால் இருள் கவ்விய சாலையில் செல்லும் பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இங்கு பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவங்களும் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன.
இதுதொடர்பாக பலமுறை புகார் அளித்தும் பலனில்லை. குறிப்பிட்ட தெருவில் மின்விளக்குகள் எரிய, மின்வாரிய அதிகாரிகள் இனியும் தாமதிக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோதை ஜெயராமன், மீஞ்சூர்.