கால்டாக்ஸி மூலம் சென்ட்ரல் நிலையத்துக்கு வருபவர்கள், வால்டாக்ஸ் ரோட்டிலோ, ரயில் நிலையம் முன் உள்ள சுரங்கபாதை அருகிலோ இறக்கிவிடப்படுகிறார்கள். ரயில் நிலையத்தில் இருந்து கால்டாக்ஸிகளை அழைக்கும்போதும் சாலைக்கு வந்துதான் டாக்ஸியில் ஏற வேண்டியுள்ளது. கால்டாக்ஸிகளை பெரும்பாலும் நோயாளிகளும், முதியவர்களும் மட்டுமே பயன்படுத்துகிறார்கள். எனவே, தனியார் கார்களை ரயில் நிலையத்துக்குள் அனுமதிப்பதைப் போன்று கால்டாக்ஸிகளையும் ரயில் நிலையத்துக்குள் அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமலட்சுமி, மயிலாப்பூர்.