மறைமலை நகர் நகராட்சியின் முக்கிய சாலைகளில் நடைபாதைகளை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்களது இருசக்கர வாகனங்களை நடைபாதைகளில் நிறுத்தி, பாதசாரிகளுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.
நகராட்சியின் பல சாலைகள், தெருக்களில் ஆங்காங்கே இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகிவருகின்றனர். நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட, நகராட்சி நிர்வாகங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எஸ்.கோபாலன், மறைமலை நகர்.