அயனாவரம் பகுதியில் என்.எம்.கே. முதல் தெரு, இரண்டாம் தெரு, தேவராஜ் தெரு என மொத்தம் 5 தெருக்களுக்கு ஒரே டிரான்ஸ்பார்மர் உள்ளது. இப்பகுதியில் 2500 வீடுகள் உள்ளன. இத்தெருக்களில் இரவு 11 மணிக்கு மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. 3 பேஸ் உள்ள இணைப்பில் மின்சாரம் கிடைக்கிறது. கடந்த 10 நாள்களாக இக்குறைபாடு உள்ளது. சுமார் 3 மணி நேரத்துக்கு மின்சாரம் வருவதில்லை. மாலை நேரத்தில் மிகக் குறைந்த மின்னழுத்தம் வருகிறது. இது தொடர்பாக மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதுதொடர்பாக மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
சி.எஸ். செல்வம், அயனாவரம்.