மின்வாரிய அதிகாரிகள் கவனத்துக்கு...

அயனாவரம் பகுதியில் என்.எம்.கே. முதல் தெரு, இரண்டாம் தெரு, தேவராஜ் தெரு என மொத்தம் 5 தெருக்களுக்கு ஒரே டிரான்ஸ்பார்மர் உள்ளது.

அயனாவரம் பகுதியில் என்.எம்.கே. முதல் தெரு, இரண்டாம் தெரு, தேவராஜ் தெரு என மொத்தம் 5 தெருக்களுக்கு ஒரே டிரான்ஸ்பார்மர் உள்ளது. இப்பகுதியில் 2500 வீடுகள் உள்ளன. இத்தெருக்களில் இரவு 11 மணிக்கு மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. 3 பேஸ் உள்ள இணைப்பில் மின்சாரம் கிடைக்கிறது. கடந்த 10 நாள்களாக இக்குறைபாடு உள்ளது. சுமார் 3 மணி நேரத்துக்கு மின்சாரம் வருவதில்லை. மாலை நேரத்தில் மிகக் குறைந்த மின்னழுத்தம் வருகிறது. இது தொடர்பாக மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதுதொடர்பாக மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

சி.எஸ். செல்வம், அயனாவரம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com