மடிப்பாக்கம் அருட்ஜோதி சாலையில் மணிமேகலை தெருவில் இருந்து கண்ணகி தெரு வரை கழிவுநீர்க் கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள் அடைத்துக் கொண்டு கழிவு நீர்போகாமல் துர்நாற்றம் வீசுகிறது. அதனால் அப்பகுதிவாழ் மக்களின் உடல் நலம் பாதிக்கும் அபாயம் உள்ளது. திறந்த கழிவு நீர்க் கால்வாயாக இருப்பதால் பிளாஸ்டிக் கழிவுகளை எளிதாக வீசிச் செல்கின்றனர். இக்கால்வாயை மூடிவிட்டால் இந்த அவலம் தடுக்கப்படும். இது தொடர்பாக மாநகரத் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எம்.எஸ். இப்ராஹிம், சென்னை.