திருமங்கலம் காவல் நிலையம் அமைந்துள்ள பள்ளிச் சாலையில் நடைபாதையை ஆக்கிரமித்து 30-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதனால் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்தும் பலனில்லை. அமைச்சரோ, பெருமாநகராட்சி ஆணையரோ அல்லது அதிகாரிகளோ நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழரசன் மாயாண்டு, அண்ணா நகர் மேற்கு.