திருவிக நகர் பகுதியிலிருந்து திருவான்மியூர் வரை 29சி-விரிவாக்கம் செய்யப்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால் சரியான நேரங்களுக்கு இந்த பேருந்துகள் வருவதில்லை. சில நாட்கள் இந்தப் பேருந்துகள் இயக்கப்படாமலும் போகின்றன. எனவே சரியான நேரத்தில் பேருந்துகளை இயக்க வேண்டும். மேலும் கூடுதலாக பேருந்துகளை இந்த வழித்தடத்தில் இயக்க போக்குவரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
சுப்பையா வினோத், திருவிக நகர்.