ஆவடி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் 6 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இங்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் (ஆர்டிஓ), நீதிமன்றங்கள் போன்றவை இல்லை. எனவே ஆவடி பகுதி மக்கள் அம்பத்தூர், திருவள்ளூர், பூந்தமல்லி பகுதிகளுக்குச் செல்கின்றனர்.
எனவே ஆவடி தொகுதி மக்களின் நலனுக்காக இங்கு ஆர்டிஓ, நீதிமன்றங்களை அமைக்கவேண்டும்.
எஸ். வைத்தியநாதன், ஆவடி.