சென்னை மூவரசம்பேட்டையில் இருந்து வானுவம்பேட்டை வரையுள்ள மாநில நெடுஞ்சாலை மிகவும் குறுகலாகவும் குண்டும் குழியுமாக மிக மோசமாகவும் உள்ளது. சாலையின் இருபுறமும் ஏற்கெனவே அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகள் மீண்டும் முளைத்துள்ளன. பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளால் அதிகம் பயன்படுத்தப்படும் இச்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் நிரந்தரமாக அப்புறப்படுத்தப்பட்டு சாலை அகலப்படுத்தப்பட வேண்டும்.
சி.இரவிசங்கர், மடிப்பாக்கம்.