சென்னை மாநகரின் மையப்பகுதியும் முக்கியமாக மக்கள் அதிகம் கூடும் பகுதியாகவும் பிராட்வே விளங்குகிறது. இங்குள்ள பேருந்து நிலையம் பெரிதாக இருந்தாலும் கடைகள், பூ, காய்கறி, பழங்கள் விற்கும் வியாபாரிகளால் நடைபாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி பயணிகள் பயன்பெறும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சீனி.சேதுராமன், மடிப்பாக்கம்.