சென்னை 95-ஆவது வட்டம், வில்லிவாக்கம் திருநகர் 12ஆவது தெருவில் உள்ள ஒரு வீட்டில் 200 அடி ஆழத்துக்கு மெட்ரோ குடிநீர் இணைப்பு அமைந்துள்ளதால், அத் தெருவில் வசிக்கும் அனைத்து வீடுகளிலும் குடிநீர் வருவது இல்லை. இதனால், அப் பகுதி மக்கள் கேன்களில் வரும் குடிநீரையே வாங்க வேண்டியுள்ளது. இதுபற்றி பகுதி மெட்ரோ குடிநீர் அலுவலகத்துக்கும் தலைமை அலுவலகத்துக்கும் புகார் அனுப்பியும் நடவடிக்கை இல்லை. இணைப்பின் பின்னணியில், பகுதி நெட்ரோ அதிகாரி கையூட்டு பெற்றுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பாக, அதிகாரிகள் நேரில் வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நித்திலா செல்வராஜ், வில்லிவாக்கம்.