அம்பத்தூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தையொட்டி நீதிமன்ற வளாகம் உள்ளது. இந்தக் கட்டடம் 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதால் மோசமான நிலையில் உள்ளது. பூந்தமல்லி, ஆலந்தூர், தாம்பரம் பகுதிகளில் புதிதாக நீதிமன்றக் கட்டடம் கட்டடப்பட்டது போல அம்பத்தூர் நீதிமன்றத்துக்கு புதிய கட்டப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
ஆர்.வெங்கடாசலம், அம்பத்தூர்.