புதிதாக வழங்கப்படும் ரேஷன் ஸ்மார்ட் கார்டு இன்னமும் சிலருக்குக் கிடைக்கவில்லை. கார்டு வரவில்லை என்று சொல்கிறார்கள்.
குளறுபடிகளுடன் கடிய கார்டுகளுக்கு மாற்றுக் கார்டும் வழங்கப்படாததால் பொதுமக்கள் ரேஷன் கடைக்கு பல முறை அலைக்கழிக்கப்படுகிறார்க. அங்கு கேட்டால் சரியான தகவல் கிடைக்கவில்லை எனக் கூறுகிறார்கள்.
ரேஷனில் 10-ஆம் தேதிக்குள் இருப்பு இருந்தால் தான் பொருள்கள் கிடைக்கும். அதற்கு மேல் கேட்டால் இது அடுத்த மாதத்திற்கான இருப்பு என கூறுகிறார்கள் இக்குறைகளை உணவுத் துறை அதிகாரிகள் களைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பி.சே.ஈஸ்வரன், சென்னை.