அண்ணாநகர் எல் பிளாக் 18 -ஆவது தெருவில் வேரோடு சாய்ந்து விழும் நிலையில் உள்ள மரத்தால், இப்பகுதியில் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது. தற்பொழுது மழை காலம் என்பதால், காற்று வேகமாக வீசினாலோ,
மழை பலமாக பெய்தாலோ அந்த மரம் சாலையில் செல்பவர்கள் மீது விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகவே, அந்த மரத்தை துரிதமாக அப்புறப்படுத்த, மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செ.பழனி, அண்ணா நகர் கிழக்கு.