இலவச பேருந்து டோக்கன்கள் நிறுத்தம்

மாநகர போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகளில் மூத்த குடிமக்கள் கட்டணம் இன்றி பயணம் செய்ய, மறைந்த முதல்வர் ஜெயலலிதா

மாநகர போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகளில் மூத்த குடிமக்கள் கட்டணம் இன்றி பயணம் செய்ய, மறைந்த முதல்வர் ஜெயலலிதா மாதம் 10 டோக்கன்கள் வழங்க ஆணை பிறப்பித்தார். இதனைத்தொடர்ந்து கடந்த 2016 டிசம்பரில் கூடுவாஞ்சேரி மக்கள் மட்டுமல்லாமல் மறைமலை நகர் பகுதி மக்களும் பயன்பெறும் வகையில் இதை நீட்டிக்க வேண்டும் என்று முதல்வருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டதை அடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் மறைமலை நகர் மூத்த குடிமக்களுக்கும் மாதம் பத்து இலவச டோக்கன் வழங்கப்பட்டது. ஆனால், கடந்த செப்டம்பர் மாதம் முடிந்த பின்னர் இலவச டோக்கன் வாங்கச் சென்றபோது மேலிடத்திலிருந்து உத்தரவு ஏதும் வரவில்லை என்று கூறிவிட்டனர். எனவே மறைமலை நகர் பகுதி மூத்த குடிமக்களுக்கு மீண்டும் அடையாள அட்டை மற்றும் இலவச டோக்கன்கள் வழங்க போக்குவரத்துக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 கோபாலன், மறைமலைநகர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com