சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து அதிகப்படியான பயணிகள் நாள்தோறும் செங்கல்பட்டு, வேலூர் போன்ற தொலைவில் உள்ள இடங்களுக்கு பயணம் செய்து வருகின்றனர். எனவே, பயணிகளின் நீண்ட கால அவசிய கோரிக்கையை ஏற்று, சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் நவீன முறையில் கழிப்பிட வசதியை ரயில்வே நிர்வாகம் அமைத்து தர வேண்டும்.
இரா.எத்திராஜ்,
மேற்கு சைதாப்பேட்டை.