காளியம்மன் கோயில் சாலை கோயம்பேடு, சின்மயா நகர், அய்யப்பா நகர், நடேசன் நகர் வழியாக விருகம்பாக்கம் வரை செல்கிறது. இந்த சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து சாலை குறுகிவிட்டது. இதனால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர். சாலையை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்படுவதால், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது. இந்தச் சாலையை அகலப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ஆவண செய்ய வேண்டும்.
க.சீனிவாசன், விருகம்பாக்கம்.