வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்கா எதிரில் ஓட்டேரி விரிவுப் பகுதி அமைந்துள்ளது. இங்கு 3- ஆவது பிரதான சாலையில் இரு பக்கமும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இந்த சாலையின் ஒரு பகுதி மட்டும் மிகவும் பள்ளமாக உள்ளது. அங்கு தனியார் பள்ளி உள்ளது. ஆகவே மாவட்ட ஆட்சியர் இப்பகுதியைப் பார்வையிட்டு பள்ளத்தை மேடுபடுத்தி மழைநீர் வடிகால்வாய் அமைக்க வேண்டும்.
ஏ.நரசிம்மன், வண்டலூர்.