ஓய்வூதியதாரர்கள் தங்களது ஆயுள் சான்றிதழைப் புதுப்பிக்கும் காலம் இது. தினமும் ராயப்பேட்டை உள்ளிட்ட அரசு மருத்துவமனை வாயிலில் மருத்துவச் சான்றிதழ் பெற குறைந்தது 5 மணி நேரம் காத்துக்கிடக்கின்றனர். இதனால் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனர். தொலைவில் இருந்து வருவதால் சாப்பிட முடியாமல் அவதிப்படுகின்றனர். பெரும்பாலும் சர்க்கரை நோயாளிகளாக இருப்பதால் சாப்பிடமுடியாமல் அவதிப்படுகின்றனர். இது போன்றவர்களுக்கு ஆங்காங்கு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்தால் மிகவும் பயனுள்ளதாய் இருக்கும்.
ஜி. இராஜகுரு,திருவான்மியூர்.