சென்னை திருவொற்றியூர் சுங்கச்சாவடி முதல் விம்கோ நகர் வரை மெட்ரோ ரயில் வழித்தடப் பணிகள் நடைபெறுவதால் சாலையின் பெரும் பகுதி உயரமான தூண்கள்அமைக்கும் பணிக்காக ஆழமான பள்ளங்கள் தோண்டப்படுவதால் மழைக்காலங்களில் இருபுறமும் ஒதுக்கப்பட்டிருக்கும் குறுகிய சாலையில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறி பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர். இந்த வழித்தடத்திலேயே மாநகராட்சியின் மண்டல 1 }ன் அலுவலகம் அமைந்திருந்தும் மழைநீரை அகற்றும் பணிகளை விரைந்து எடுப்பதில்லை, மெட்ரோ ரயில் பணிகள் நிறைவு பெறும் வரையில் மாநகராட்சி மழைநீர் தேங்காதவாறு துரிதநடவடிக்கை எடுக்க வேண்டும்.
கவியழகன், திருவொற்றியூர்.