அம்பத்தூரை அடுத்த அயப்பாக்கம் பகுதியில் இருக்கும் சாலைகள் லேசனா மழைக்கே தாக்கு பிடிக்கமுடியாமல் அங்குள்ள குண்டும், குழியுமான சாலையில் மழைநீர் தேங்கி விடுகிறது. பல இடங்களில் பாதாள சாக்கடையில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கொசு தொல்லை மற்றும் துர்நாற்றம் ஏற்படுகிறது. இதை சரிசெய்ய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வீரபத்திரன், அயப்பாக்கம்.