அயனாவரம்-வில்லிவாக்கம்-பாடி மேம்பாலம் வரையிலான கொன்னூர் நெடுஞ்சாலையின் இருபுறமும் சாலைகளை மறித்து வாகனங்களை நிறுத்தி வைக்கின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு இடையே வாகனங்களை இயக்க வேண்டியுள்ளது. பாதசாரிகள் மிகுந்த சிரமத்துக்கு இடையே நடக்க வேண்டியுள்ளது.
இந்த வாகனங்களைக் கட்டுப்படுத்த ஐசிஎஃப் பேருந்து நிலையம் அருகே காவல் கட்டுப்பாட்டு அறை உள்ளது. ஆனால் போக்குவரத்துக் காவலர்கள் யாரும் நடவடிக்கை எடுப்பது போல் தெரியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்தப் பிரச்னையைத் தீர்க்கவேண்டும்.
ப.த.கதிர்வேலு, வில்லிவாக்கம்-49