சென்னை பெரவள்ளூர் குமரன் நகர் போஸ்ட் ஆபீஸ் பின்புறமுள்ள வரதராஜன் தெரு கடைசியில் திருமூலர் வர்ம ஆராய்ச்சி மற்றும் சிகிச்சை மையம் உள்ளது. இங்கு சிறிய அளவில் மழை பெய்தாலும் சாலை முழுவதும் மழை நீர் தேங்குகிறது. இதனால் இந்த தெருவில் வரும் பாதசாரிகளும், நோயாளிகளும் மிகுந்த சிரமத்துக்கு இடையே நடக்க வேண்டியுள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் தலையிட்டு இந்தப் பிரச்னையைத் தீர்க்க முன்வரவேண்டும்.
ஆ.ஜெயகிருஷ்ணன், திருவிக நகர்.