தொடரும் மின்தடையால் அவதி!

சைதாப்பேட்டை வி.எஸ்.முதலி தெரு, கணபதி பள்ளிக்கு எதிரில் உள்ள சந்தில் சுமார் 30 குடியிருப்புகள் உள்ளன.

சைதாப்பேட்டை வி.எஸ்.முதலி தெரு, கணபதி பள்ளிக்கு எதிரில் உள்ள சந்தில் சுமார் 30 குடியிருப்புகள் உள்ளன. இந்தப் பகுதியில், கோடை காலம், மழைக் காலம் என்றில்லாமல், எந்தக் காலத்திலும் முன்னறிவிப்பின்றி அவ்வப்போது மின்தடை ஏற்படுவது ஆண்டுக்கணக்கில் தொடர்கதையாக உள்ளது. மின்தடை ஏற்படும் ஒவ்வொரு முறையும், மின்வாரியத்தின் கணினிமயமாக்கப்பட்ட புகார் மையத்தை தொடர்பு கொண்டு, மின்தடையை சரிசெய்ய சொல்வதற்கு குடியிருப்புவாசிகள் அலைப்பேசியில் பல மணி நேரம் போராட வேண்டியுள்ளது. சம்பந்தப்பட்ட உதவி மின்பொறியாளரும் மின்வெட்டு பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்காததால், மின்தடையால் இப்பகுதி மக்கள் தொடர்ந்து மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இனியாவது இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வுகாண தேவையான நடவடிக்கைகளை மின்வாரியம் விரைந்து எடுக்க வேண்டும்

பா. உமா, சைதாப்பேட்டை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com