ஆவடி பெருநகராட்சிக்கு உள்பட்ட தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு செக்டார் இரண்டில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்துக்குச் சொந்தமான இடத்தில் உயர் அழுத்த மின்சார டிரான்ஸ்பார்மர்கள், மின் பகிர்மான நிலையம் ஆகியவை உள்ளன. கடந்த ஆண்டு வீசிய புயலின்போது இந்த இடத்தின் மதில் சுவர் இடிந்து விழுந்துவிட்டது. தற்போது அந்த நிலையத்துக்கு கதவும் இல்லாததால், யார் வேண்டுமானாலும் உள்ளே செல்லும் நிலை உள்ளது. மின்சார வாரிய உயரதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து நிலைய வாயிலைக் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செ.பழனி, ஆவடி.