ஆவடி பெருநகராட்சியில் 6 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட பாதாள சாக்கடைத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் ஆவடி பகுதியில் பெரும்பாலான இடங்களில் கழிவுநீர் தேங்கிக் காணப்படுகிறது. இதனால் இங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே நகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பாதாள சாக்கடைத் திட்டத்தை பூர்த்தி செய்யவேண்டும்.
ந.ஜெ.இராமன், ஆவடி.