அயனாவரம் பேருந்து நிலையத்தில் இருந்து அமைந்தகரை வரை இயக்கப்பட்டு வந்த எஸ்.55 தடம் எண் சிற்றுந்து, எந்த முன்னறிவிப்பும் இன்றி நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். எனவே, மேற்கண்ட சிற்றுந்தை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இந்த வழித்தடத்தை கோயம்பேடு வரை இயக்கினால் பொதுமக்கள், வியாபாரிகள், பணிக்குச் செல்வோர் மீண்டும் பயனடைவர்.
மு.ராஜவேல், அயனாவரம்.