நடவடிக்கை தேவை..!

பெருநகர சென்னை மாநகராட்சியில் மொத்தம் 200 வார்டுகள் உள்ளன. இவை 15 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

பெருநகர சென்னை மாநகராட்சியில் மொத்தம் 200 வார்டுகள் உள்ளன. இவை 15 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த மண்டல அதிகாரிகளுக்கு ஓட்டுநர் வசதியுடன் கூடிய வாகனம், செல்லிடப்பேசி ஆகியவை அளிக்கப்பட்டுள்ளன. ஆனால், தெருவிளக்கு, சாலை வசதி, குப்பை எடுத்தல் போன்ற பிரச்னைகளுக்காக இந்த செல்லிடப்பேசி எண்களுக்கு பொதுமக்கள் அழைத்தால் அதிகாரிகள் கண்டுகொள்வதே இல்லை. மேலும், ஒரு வார்டுக்கு 25 தெருவிளக்குகள் வீதம் 200 வார்டுகளிலும் சுமார் 5,000 தெருவிளக்குகள் எரிவதில்லை. வாரம் ஒருமுறையாவது தங்களது வாகனங்களில் தங்கள் எல்லைக்குள்பட்ட வார்டுகளை அதிகாரிகள் வலம் வந்தால், இத்தகைய பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியும். செய்வார்களா?

கோதை ஜெயராமன், மீஞ்சூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com