சென்னை உயர்நீதிமன்றம் முதல் கொடுங்கையூர் பார்வதி நகர் வரை இயக்கப்பட்ட தடம் எண்.44எல் மாநகரப் பேருந்து, வியாசர்பாடி பணிமனை நிர்வாகத்தால் நிறுத்தப்பட்டு விட்டது. அதனால், எங்கள் பகுதியில் வசிக்கும் முதியோர், தாய்மார்கள், கல்லூரி, பள்ளி மாணவ மாணவிகள் உள்ளிட்டோர் ஷேர் ஆட்டோக்களில் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, பார்வதி நகருக்கு வரும் தடம் எண்.44 எல் மாநகரப் பேருந்தை மீண்டும் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
ஆர்.கமலா ரவிசங்கர், கொடுங்கையூர்.