நொளம்பூர் சக்தி நகர் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்த இரண்டு சிற்றுந்துகள், தற்போது ஒன்றாக குறைக்கப்பட்டு விட்டது. இதனால், இரண்டு மணி நேரங்களுக்கு ஒருமுறைதான் பேருந்து வருகிறது. எங்கள் பகுதிக்கு மற்ற சாதாரண பேருந்துகளும் இயக்கப்படுவதில்லை. தீபாவளி பண்டிகை நெடுங்கி வரும் நேரத்தில் சிற்றுந்து குறைக்கப்பட்டதால் பல இன்னல்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. எனவே, போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எம்.பார்த்தசாரதி, நொளம்பூர்.