112ஆவது மண்டலத்துக்கு உள்பட்ட செளராஷ்டிரா நகர், ஜக்கரியா காலனி, டிரஸ்ட்புரம் ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக டெங்கு காய்ச்சல் தாக்கம் அதிகமாக உள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளிலும் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி வீதம் நியமிக்கப்பட்டு டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக வெளிவந்துள்ள செய்தி மகிழ்ச்சியளிக்கிறது. துப்புரவுப் பணியாளர்கள் பற்றாக்குறையைத் தவிர்த்தல், பல இடங்களில் தேங்கியுள்ள குப்பையை உடனடியாக அகற்றுதல், காலை - மாலை இரு வேளைகளிலும் பெரிய லாரிகள் மூலம் குப்பையை உடனுக்குடன் அகற்றுதல், மலேரியா பணியாளர்கள் மூலம் கொசு மருந்து அடித்தல் போன்ற பணிகளை முறையாக மேற்கொண்டால் டெங்குவை வெகுவாக குறைக்க முடியும்.
இல.அன்பரசன், சூளைமேடு.