அண்ணா நகர் தொகுதிக்குள்பட்ட வட்டம் 102-ன் கீழ் உள்ள அமைந்தகரை பகுதியில் சமீபத்தில் திறக்கப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. முக்கிய ஆவணங்கள் பாதுகாக்கப்படும் வட்டாட்சியர் அலுவலகம் சுற்றுச்சுவர் இல்லாததால் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. இதைச் சுற்றி குப்பையும் குவிந்து கிடக்கிறது. இந்த அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்தில் கூடுதலாக கணினிகளும் நிறுவப்படவேண்டும்.
செ.பழனி, அண்ணா நகர் கிழக்கு.