திருவான்மியூர் சிக்னளை அடுத்த எல்.பி.சாலையில் ரேஷன் கடை அருகே ஒரு பயணியர் நிழற்குடை உள்ளது. இந்த நிழற்குடையில் இந்த வழியே செல்லும் பேருந்து தட எண்களுக்குப் பதிலாக அந்த வழிக்கே சம்பந்தமற்ற வழித்தடங்கள் 23சி, 47ஏ, 56, 29சி ஆகிய பேருந்து நிற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனால், பெண்கள், வயோதிகர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் இங்கு அதிக காத்திருந்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். எனவே சரியான பெயர்ப்பலகையை அங்கு வைக்கவேண்டும். இந்த வழியாகச் செல்லும் 102கே, 102, 102சி ஆகிய வழித்தட பேருந்துகள் நிற்க நடவடிக்கை எடுத்தால் பயனுள்ளதாக இருக்கும்.
ஜி.ராஜகுரு, திருவான்மியூர்.