சென்னையின் பல்வேறு இடங்களில் மெட்ரோ ரயில் நிலையங்கள் செயல்படுகின்றன. மெட்ரோ ரயில் நிலையங்களின் தரைப்பகுதி பளபளப்பாகவும் வழுக்கும் தன்மை உடையதாகவும் உள்ளது. இதனால் முதியோர், குழந்தைகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். மழைக் காலங்களில் வழுக்கும் தன்மையுடைய தரையில் நடப்பது ஆபத்தை விளைவிக்கும். பொது நலன் கருதி, மெட்ரோ ரயில் நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பி.ஸ்ரீவித்யா, திருவான்மியூர்.